ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் உள்ள மருத்துவ கழிவுகள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளன.
குறித்த மருத்துவக் கழிவுகள், அந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டவை அல்லவென மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளரான மருத்துவர் தீபிகா படபெதிகே தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் உள்ள மருத்துவமனைகளில் இதுபோன்ற பாரியளவான மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த மருத்துவக் கழிவுகள், வேறு பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகளிலிருந்து கொண்டுவந்திருக்கலாம் எனத் தான் சந்தேகம் கொள்வதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க