உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

பண்டாரவன்னியனின் நினைவு தினத்தை முன்னிட்டு புத்துயிர் பெறும் நினைவுத்தூபி

வவுனியாவிலுள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபி புத்துயிர் பெற்று வருகின்றது. பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா நகரசபை கலாச்சார மண்பத்தில் நகரசபைத்தலைவர் கௌதமன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள அன்னாரின் நினைவுத்தூபி கடந்த சில தினங்களாக நகரசபை ஊழியர்களினால் அழகு படுத்தப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நினைவுத் தூபியில் காலை 8.15மணியளவில் மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வையடுத்து நகரசபை கலாச்சார மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும், விஷேட விருந்தினர்களாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தலைவரும் முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவருமான மு.சிற்றம்பலம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க