ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் மலரவுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு சஜித் பிரேமதாச தரப்பும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும், ரணிலை அணியை சமரசப்படுத்தும் வியூகமாககூட இது இருக்கலாம் எனவும் அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
அதேவேளை, புதிய கூட்டணியில் ரணிலினதும், அவரின் சகாக்களினதும் ஆதிக்கம் கோலோச்சும் என்பதால் பொதுச்செயலாளர் பதவி சஜித் பிரேதமாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவிவருகின்றது.
இப்பதவியை தமக்க வழங்குமாறு சஜித் பிரேமதாச அண்மையில் வெளிப்படையாகவே கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க