உள்நாட்டு செய்திகள்புதியவை

பெரமுனவுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: தினேஷ் எம் பி

வடக்கு உட்பட நாடு முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்களும் ஏனைய இன மக்களும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இன்று இடம்பெற்ற அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான்கரை வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சி செய்துள்ளது. தமிழ் தலைமைகளுக்கூடாக கிடைக்கும் என்று எதிர்பார்த்த எந்தவொரு உதவியும் இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.

மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே வடக்கிலுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட அனைவர் வாழ்வில் மாற்றத்தை காண முடியும். இந்த மாற்றத்தை எமக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஏற்படுத்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க