உள்நாட்டு செய்திகள்புதியவை

கஞ்சிபானை இம்ரானுடன் தொடர்புடைய காவல் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபானை இம்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் மூன்று காவல்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 19) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் கொழும்பு குற்றப்பிரிவு (சி.சி.டி) யிலிருந்து மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த அதிகாரிகள் பாதாள உலக குழு குற்றவாளியுடன் தொடர்பு கொண்டதாக மகல்கந்த சுதந்த தேரரினால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகள் பொலிஸ் தலைமையகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க