உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கைது

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரலால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையின் நோர்வே தீவுக்கு அருகில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர்.

மீனவர்களால் பிடிக்கப்பட்ட 376 கிலோகிராம் மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க