விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து, ஆஸி டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவு!

இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஏஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

ஏஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 258 ஓட்டங்களையும் அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டன.

இந்நிலையில, 8 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து தனது 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்தது. 4 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை பெற்றது.

நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் ஆரம்பமாகியது.

இதில் மொத்தமாக இங்கிலாந்து 266 ஓட்டங்களால் முன்னிலைப் பெற்றதால் அவுஸ்திரேலியாவுக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து 267 ஓட்டங்கள் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ஏஷஸ் தொடரின் 2 ஆவது போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

கருத்து தெரிவிக்க