உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

தேசிய மெய்வல்லுநர் போட்டியில் நிமாலி லியனாராச்சி சாதனை!

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் நிமாலி லியனாராச்சி தேசிய சாதனையுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

இவர் இப்போட்டித் தூரத்தை 4 நிமிடங்கள் 15.89 செக்கன்களில் நிறைவு செய்ததன் மூலம், 2012 ஆம் ஆண்டு சம்பிக்கா தில்ருக்சியால் ஏற்படுத்தப்பட்ட 4 நிமிடங்கள் 16.42 செக்கன்கள் என்ற தேசிய சாதனையை முறிடித்தார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தை கயன்திகா அபேரட்ணவும் (4 நிமி.22.24 செக்.), முன்றாம் இடத்தை கே.ஏ. குமாரியும் (4 நிமி.49.77 செக்.), பெற்றுக்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க