உள்நாட்டு செய்திகள்புதியவை

தொடரூந்தில் மோதி பெண் உயிரிழப்பு

நாவலப்பிட்டி- வரக்காவ பகுதியில் தொடரூந்தில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ரம்பொட – வெதமுள்ள தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய செல்லத்துரை கோபிகா எனப்படும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி – வரக்காவ பகுதியில் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற தொடரூந்தில் குறித்த பெண் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த சம்பவம் எதேர்ச்சையாக நடந்ததா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க