வெளிநாட்டு செய்திகள்

தன்சானியா விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

தன்சானியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற பாரவூர்தி கவிழ்ந்ததில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வடைந்து உள்ளது.

குறித்த பாரவூர்தியில் இருந்து பாதையில் வழிந்தோடிய எரிபொருளை பலர் சேகரிக்க முற்பட்ட நிலையில் பலர் உயிரிழந்திருந்தனர்.

பலர் உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 95 ஆக அதிரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள மொரகரோ நகரில் எரிபொருள் ஏற்றி சென்ற பாரவூர்தி விபத்துக்குள்ளாகி இருந்தது.

இதனால் அந்த பகுதியில் வசித்து வந்தோர் அவற்றை சேகரிக்க முயற்சித்து உள்ளனர். இந்நிலையில் எரிபொருள் பாரவூர்தி தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியுள்ளது. ஆனால் இதனை கவனிக்காத பலர் தீயில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க