உள்நாட்டு செய்திகள்புதியவை

கிணற்றில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

பொத்துவில் பகுதியில் சிறுவனொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொத்துவில் – ஆர். எம். நகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொஹமட் ஷியாத் மொஹமட் ஹதீத் எனப்படும் நான்கரை வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவனின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகில் காணப்படும் கொய்யா மரத்தில் ஏறி பழங்களை பறிக்க முற்பட்ட போது கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கருத்து தெரிவிக்க