உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகின்றது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 3.30 அளவில் சாட்சி வழங்கல் ஆரம்பமாகும் என தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்த விஷேட மூவரடங்கிய குழுவின் உறுப்பினர்கள் அன்றைய தினம் சாட்சி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க