உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

செப்டம்பர் வரை கோட்டாவுக்கு எதிரான ரணில் தரப்பு போட்டியாளர் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு இந்த மாதத்துக்குள் இடம்பெறாது என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கூட்டணி ஒன்றை அமைக்கும் முகமாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கமின்றி முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர் யார் என்ற விடயத்துக்கும் முடிவு எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய தரப்புக்களின் தகவல்படி ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் செப்டம்பர் மாதத்திலேயே தெரிவுசெய்யப்படவுள்ளார்.

எனவே அது வரைக்கும் புதிய கூட்டணியை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க