உள்நாட்டு செய்திகள்புதியவை

‘திங்களன்று ஐ.தே.கவின் வேட்பாளர் தீர்மானம் எடுக்கப்படும்’

எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் புதிய கூட்டணி தொடர்பிலும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.தே. கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பம் நிலவும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால எட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு அமைய கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் தலைமைத்துவத்திடம் கலந்துரையாடலில் ஈடுபடுவது தொடர்பில் அறிவிக்கப்படும் என் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி யின் தலைவர் மற்றும் பிரதி தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க