உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டமா அதிபர் மீது நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு

கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் லங்கா ஜெயரத்னவை விமர்ச்சித்தமைக்காக சட்டமா அதிபர் டப்புல்ல டி லிவேராவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த முறைப்பாடே அவருக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை நாவலையை சேர்ந்த சேனபால என்பவர் செய்துள்ளார்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமஸ்ரீ பெர்ணான்டோ மற்றும் காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஊடக செயலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் இந்த உத்தரவு சட்டரீதியற்றது என்றும் பக்கசார்பானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க