உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு!

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமையவே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றரின்  விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர்  விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும்,  ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை

கருத்து தெரிவிக்க