எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமையவே இந்த அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்படி ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவாலும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை
கருத்து தெரிவிக்க