உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘சாமிமலை விநாயகர் ஆலயத்தில் வெள்ளநீர் பெருக்கெடுப்பு’

இன்று காலை முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக சாமிமலை பகுதியில் உள்ள ஆற்றடி பிள்ளையார் ஆலயத்தினுல் வெள்ளம் புகுந்தது.

மேலும் இந்த பகுதியில் உள்ள சில தொழிலாளர் குடியிருப்புகளுக்குள்ளும்  வெள்ளம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் சாமிமலை பகுதியில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது .

இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்களும் சேதமடைந்துள்ளது .

வர்த்தக நிறுவனங்கள் மக்கள் நடமாட்டமின்மையால் வெறிச்சோடி கிடந்தது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க