உள்நாட்டு செய்திகள்புதியவை

பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கருவெலகஸ்வெவ பிரதேச சபை உறுப்பினரான தமயந்த ஏக்கநாயக்க என்பவரே இவ்வாறு ஆனமடுவ பகுதியில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேச சபை உறுப்பினரிடமிருந்து 700 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க