உள்நாட்டு செய்திகள்புதியவை

களுவாஞ்சிக்குடியில் கூட்டமைப்பின் விழிப்புணர்வு நிகழ்வு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற கேள்விகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற தெளிவுபடுத்தல் கூட்டம் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அவதானிக்கத்தக்கது.

கருத்து தெரிவிக்க