உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் துப்பாக்கி ரவைகள்: அகற்ற நடவடிக்கை

வவுனியா உலுக்குளம் பகுதியில் நேற்று துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

உலுக்குளம் குளப்பகுதிக்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த மீனவர்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து மேற்படி பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற அனுமதியின் பின்னர் குறித்த கைகுண்டினை அப்பகுதியில் இருந்து விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் அகற்றவுள்ளதாக பொலிசார் மேலும் தெரவித்தனர்.

கருத்து தெரிவிக்க