உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

செல்வம் அடைக்கலநாதன் – கட்சியின் பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

பாராளுமன்ற குளுக்களின் பிரதி தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று [11) காலை 11 மணியளவில் மன்னார் ரெலோ அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடலில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் மன்னார் பிரதேசசபை உறுப்பினருமான ஏ.ரி. மோகன்ராஜ் , துணை அமைப்பாளர் வினோ, மன்னார் நகரமுதல்வர்   அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபை உபதவிசாளர்   லூர்துநாயகம், மன்னார்  மாவட்ட இளைஞரணி செயலாளர் பிறேம் குமார் உட்பட உள்ளூராட்சி மன்றதேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சியின் கடந்த கால செயற்பாடுகள் தற்போதைய செயற்பாடுகள் செல்வம் அடைக்கலநாதன்  அவர்களின் பல்வேறுபட்ட நிதி ஒதுக்கீடுகள் மூலம் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டதோடு, எதிர் கால செயற்பாடுகள் அரசியல் நகர்வுகள் பற்றிய ஆலோசனைகளும் திட்டமிடலும் இடம்பெற்றது.

இதன் போது சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. மேலும் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களின் அபிவிருத்தி தேவைகளை ஆராய்ந்து சீரான அபிவிருத்தி வேலையை முன்னெடுக்க மாவட்ட அமைப்பாளர்  மோகன்ராஜ் தலைமையில் 11 பேர்கள் கொண்ட திட்டமிடல் அபிவிருத்தி குழு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க