உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘தமிழ் மக்கள் கூட்டணி அலுவலக திறப்பு விழாவில் நா. உ ஆனந்தன் ‘

தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா அலுவலக திறப்புவிழாவில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருந்தார்.
வவுனியா கற்பகபுரத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் சி. வி. விக்னேஸ்வரன் அலுவலகத்தினை திறந்து வைத்திருந்தார்.
இதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்பி கலந்துகொண்டிருந்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியுடன் சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி இணைந்து தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கும் நிலையில் அவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், ஈ. பி. ஆர். எல். எப். கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராஜாவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க