உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி பரிந்துரைத்தவர் அனுபவமில்லாதவர்- பிரதம நீதியரசர்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்தவர், தகுதி குறைந்தவர் என்று பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மற்றும் ஒருவரை பரிந்துரைக்குமாறு அரசியலமைப்பு சபை ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான வெற்றிடத்துக்காக லக்ஷ்மி மேனகா ஜெயவிக்கிரம என்பவரை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.

எனினும் அவர் குறித்த பதவிக்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறி; சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய அரசியலமைப்பு சபை ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்தது.

இதன்போது ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர் நீதித்துறையில் போதிய அனுபவத்தை கொண்டிருக்காதவர் என்று பிரதம நீதியரசரும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து புதிய ஓருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதியிடம் அரசியலமைப்பு சபை கோரியுள்ளது.

கருத்து தெரிவிக்க