உள்நாட்டு செய்திகள்புதியவை

பெரமுனவின் மாநாட்டில் சுதந்திர கட்சியினர் பங்கேற்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைய, தான் உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் 15 உறுப்பினர்கள் அடங்கிய குழு இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததினால் தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியின் மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜக பெரமுனவின் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க