உள்நாட்டு செய்திகள்புதியவை

‘எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கும் ஒருவரையே களமிறக்குவோம்’

எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய, பலமிக்க ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளோம் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக குறிப்பிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எமது தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா என பலர் உள்ளனர்.

எதிரணி வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய,ஒருவரையே நாம் வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளோம்.

அதேநேரம், எமது தரப்பிலிருந்து சிலர் தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சென்று சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவர்கள் செல்வதில் தவறில்லை என்பதுவே எமது கருத்தாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க