உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 பேர் கைது!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 165 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த கைதுகளுக்காக காவல்துறையினருக்கு விசேட வெகுமணங்களும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க