களனி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட குற்றப்பிரிவினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 தங்க வில்லைகளும் , 2 மோதிரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை கிரிபத்கொட , பேலியகொட மற்றும் மிரிஹான ஆகிய பகுதிகளில் காணப்படும் 4 வீடுகளில், சந்தேக நபர்கள் கொள்ளையிட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களனி பகுதியைச் சேர்ந்த 28,47 ஆகிய வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க