உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

வவுணதீவில் சட்டவிரோத மண் அகழ்வு: இருவர் கைது

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சட்டவிரேதமான முறையைில் மண் அகழ்வில் ஈடுபட்ட இருவர் உழவு இயந்திரத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு காவல் நிலைய பிரதி பொறுப்பதிகாரி ஆர்.எம்.சஜித் தெரிவித்தார்.

வவுணதீவு புளியடிமடு பகுதியில் அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி முறையற்ற விதத்தில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் மண் ஏற்றிக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

இதேவேளை மண் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரத்தையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க