உள்நாட்டு செய்திகள்புதியவை

‘குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல்’

குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவி காவல் அத்தியட்சர் ஈ.எஸ்.திஸேராவிற்கு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளரினால் உயிர் அச்சுறுத்தல் நிலவுவவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை குருநாகல் பிரதான நீதிவானுக்கு அறிக்கை ஒன்றின் ஊடக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் ஊடாக விஷேட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதகாக அதன் சார்பில் இன்று மன்றில் ஆஜரான உதவி காவல் அத்தியட்சர் திஸேரா நீதிவானுக்கு அறிவித்தார்.

வைத்தியர் முஹம்மத் ஷாபி மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போத இந்த விடயம் நீதிவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கருத்து தெரிவிக்க