உள்நாட்டு செய்திகள்புதியவை

குருநாகல் பிரதி காவல்துறை மா அதிபருக்கு இடமாற்றம்!

குருநாகல் பிரிவுக்கான பிரதி காவல்துறை மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை புத்தளம் காவல் பிரிவுக்கு மாற்ற தேசிய காவல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பிரதிப் காவல்துறை மா அதிபர் கீத்சிறி ஜயலத்தை கடந்த 2 ஆம் திகதி திருகோணலை காவல் பிரிவுக்கு மாற்ற தேசிய காவல் ஆணைக்குழு ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில் அதனை இரத்து செய்து அவரை புத்தளம் பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளது.

இதேவேளை சிரேஷ்ட காவல் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தனை குருநாகல் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க