உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

விஷ சாராயம் அருந்தி உயிரிழப்பு; சடலங்களை மீண்டும் தோண்ட உத்தரவு!

மீரிகம பாந்துராகொட பகுதியில் விஷம் கலந்த சாராயத்தை அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை விஷம் கலந்த சாராயத்தை அருந்தியமையினால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படுகின்ற நபர்களின் சடலங்களை மீண்டும் தோண்டியெடுக்க அத்தனகல்ல மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடுமுல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் தோண்டியெடுக்கப்படவுள்ளது.

குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே சடலத்தை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கருத்து தெரிவிக்க