உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘கொச்சி நோக்கி பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் இரத்து’

இலங்கையில் இருந்து கொச்சி வரையில் பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் இரத்து ​செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் எயார்லைன்ங் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமான கொச்சி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி மாலை 3 மணிவரையில் மூடப்படுவதாக கொச்சி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக கொச்சின் விமான நிலையம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க