உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கந்தளாய் மற்றும் பேராறு பிரதேசங்களில் சில வீடுகள் சேதம்

திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கந்தளாய் மற்றும் பேராறு பிரதேசங்களில் சில வீடுகள் சேதமடைந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று முதல் ஏற்பற்ற சீரற்ற காலநிலை காரணமாக கடும் காற்று வீசுவதுடன் மழையும் பெய்து வருகின்றது.

மாவட்ட ரீதியில் கடும் காற்று வீசி வரும் சூழ்நிலையில் பேராறு பிரதேசத்தில் சிறு சூறாவளி வீசியதில் சில வீடுகள் சேதமடைந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் சில பிரதேசங்களில் இலேசான மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டபோதும் சில பிரதேசங்களில் மழை வீழ்ச்சியும் பதிவுசெய்யப்பட்டுள்ளது

இன்று இரண்டு மணியுடனான காலநிலையைப்பொருத்தவறையில் திருகோணமலை மாவட்டத்தில் 9 வீடுகள் சேதமடைந்து இருவர் காயங்களுக்கு உள்ளானதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

கருத்து தெரிவிக்க