உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

கொழும்பில் பயணிகள் படகுச்சேவை ஆரம்பம்

கொழும்பு கோட்டையில் இருந்து கொம்பனிவீதியின் வொக்ஸ்சுவல் வீதி வரையில் பயணிகள் படகு சேவை நடத்தப்படவுள்ளது.

ஆகஸ்ட் 22ஆம் திகதி இது நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி படகுச்சேவை “பேய்ர” வாவியின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருநகரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக 50 ஆசனங்களை கொண்ட குளிரூட்டப்பட்ட படகு ஒன்றும் 30ஆசனங்களை கொண்ட குளிரூட்டப்பட்டாத படகு ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளன.

இவை காலை 7 மணிமுதல் 10 மணிவரை, மாலை 4 மணிமுதல் 9 மணி வரை சேவையில் ஈடுபடவுள்ளன.

கருத்து தெரிவிக்க