உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியவில் மாணிக்க கல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு

மஸ்கெலிய,சாமிமலை கிலனுஜி தோட்டம் டீசைட் தோட்ட பிரிவில் தேயிலை மலைகளில் சட்டவிரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர்களை இனம் காணுமாறு கோரி தோட்ட முகாமையாளரால் மஸ்கெலிய காவல் நிலையத்தில் கடந்த 5/8/2019 அன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக இனம் தெரியாத நபர்கள் இரவு நேரங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் தேயிலை செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இரவு நேரங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வருவதால் நபர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் எனவே இவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க