உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

எவென்காட் ஆயுத விடயம்: பிரதிவாதிகளின் பிடியாணை உத்தரவு ரத்து

எவென்காட் கப்பல் ஆயுத விடயம் தொடர்பான விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த விசாரணை கொழும்பு மேல்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகளான பாலித பெர்ணான்டோ மற்றும் நிஸாந்த சேனாதிபதி ஆகியோர் மருத்துக்காரணங்களுக்காக மன்றில் ஆஜராகவில்லை என்று காரணம் சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை ரத்துச்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன் செப்டம்பர் 4ஆம் திகதி இருவர் தொடர்பிலும் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பிரதிவாதிகள் மற்றும் பிணையாளிகளை மன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்து தெரிவிக்க