உள்நாட்டு செய்திகள்புதியவை

புத்தளத்தில் கடும் காற்று:19 பேர் பாதிப்பு

புத்தளம் முந்தல் பகுதியில் உள்ள பள்ளிவாசல்பாடு கிராமத்தில் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் அப்பகுதியை ஊடுறுத்து வீசிய கடும் காற்று காரணமாக ஐந்து வீடுகள் பகுதியளவிலும் நிர்மாணிக்கப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

இதன் காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மரங்கள் பலவும் முறிந்து வீழ்ந்துள்ளது எனினும் இதன்போது எவ்வித உயிர் தேசங்களும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க