உள்நாட்டு செய்திகள்புதியவை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு தடுப்பு உத்தரவு கோரப்படும்!

அம்பாறையில் நேற்று (ஆக. 5) கைது செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட ஜமாத் மில்லத்து இப்ராஹிம் (ஜே.எம்.ஐ) குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு நீதிமன்றத்திடம் ஏழு நாள் தடுப்பு உத்தரவு கோரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள பயிற்சி முகாம்களில் பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரி முஹம்மத் சஹ்ரானுடன் சந்தேக நபர்களுக்கு ஆயுத பயிற்சி கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க