உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

‘எசல பெரஹரவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’

கண்டி எசல பெரஹர நேற்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பெரஹரவை முன்னிட்டு கண்டி நகரின் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டுள்ளது.

வாகன நெரிசலை தவிர்ப்பதற்காக தனியார் வாகனங்களை தவிர்த்து, பொது வாகனங்களில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சோதனை நடவடிக்கைகளுக்கு வசதியாக எடுத்து வரும், பொதிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க