உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கல்முனையில் விபத்து; சாரதிக்கு பலத்த காயம் !

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் தாளங்குடா ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் சாரதியொருவர் சிறுகாயங்களுக்குள்ளானதுடன் பேருந்து க்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று(6) அதிகாலை 5.30 இடம்பெற்றுள்ளது.

ஆடைத் தொழிற்சாலைக்கு முன்னால் நிறுத்தி வைக்கபட்டிருந்த தொழிற்சாலைக்குச் சொந்தமான தனியார் பேருந்து மீது மாத்தறையிலிருந்து மட்டக்களப்பிற்கு மீன் ஏற்றி வந்த டிமோ பட்ட வாகனம் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மோதியதில் டிமோ பட்ட வாகன சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானார்.

பேருந்து பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவத்தினால் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது.

காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க