விளையாட்டு செய்திகள்

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 22 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் இன்று நடக்கிறது.

கருத்து தெரிவிக்க