உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்படாத மாலைத்தீவின் முன்னாள் உப ஜனாதிபதி கைது

இந்தியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட மாலைத்தீவின் முன்னாள் உப ஜனாதிபதி அஹமட் அடீப் நேற்று
கைதுசெய்யப்பட்டார்.

மாலைத்தீவு காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் உப ஜனாதிபதி பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் பின்னர் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார்.

இந்தநிலையில் அவர் கடந்த வியாழக்கிழமையன்று படகு ஒன்றின் மூலம் தமிழகம் தூத்துக்குடி கரையின் ஊடாக இந்தியாவுக்கு செல்ல முயன்றார்

எனினும் அவரின் அரசியல் அடைக்கல கோரிக்கையை ஏற்காத அதிகாரிகள் அவர் பயணித்த படகிலேயே மீPண்டும் மாலைத்தீவுக்கு திருப்பியனுப்பினர்.

இந்தநிலையில் மாலைத்தீவை சென்றடைந்த நிலையிலேயே அஹமட் அடீப் கைதுசெய்யப்பட்டார்.

கருத்து தெரிவிக்க