உள்நாட்டு செய்திகள்புதியவை

ஐ.தே.வினர் அச்சுறுத்தல் சம்பவம்: இருவருக்கு சிறைத்தண்டனை

ஹம்பாந்தோட்டை நகர பிதா மற்றும் வழக்கின் ஐந்தாவது பிரதிவாதிக்கு ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஹம்பாந்தோட்டை நகர சபையின் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் எச்.ஐ விமலசேன என்பவருக்கே ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இவ்வாறு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 2014 ஆம் ஆண்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்திருந்த வேளையில், அவர்களை போலி துப்பாக்கி வைத்து அச்சுறுத்தினார் என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கருத்து தெரிவிக்க