உள்நாட்டு செய்திகள்புதியவை

றிசாட்டுக்கு அமைச்சு பதவி: தேரர்கள் சீற்றம்

பயங்கரவாத தாக்குதல்களுக்கு அடிப்படையாக அமைந்த நிறுவனங்களை விசாரணை செய்வதை விடுத்து தாக்குதல்களில் பிரதான சூசாத்திரதாரி எனப்படும் சஹ்ரானின் சகாக்களை விசாரணை செய்வதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது என அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அஃமீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க