உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மட்டு.மாவட்டத்தில் 206 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது!

நாடளாவிய ரீதியில் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 203 பட்தாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

கிராமிய பொருளாதார அபிவிருத்தி விவசாய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உயகுமார் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என்.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன் உட்ப பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் சகல பகுதிகளையும் சேர்ந்த பட்டதாரிகள் இந் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.

கருத்து தெரிவிக்க