உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் 77 பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் வழங்கி வைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம்(01) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில்  பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 126 பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படுவதற்கான பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த 126 பெயரில் ஏற்கனவே 14 பேர் நியமனம் பெற்றவர்கள் மீளவும்  உள்வாங்கப்பட்ட நிலையில் அவர்களை தவிர்த்து  இம்முறை 112 பேர் இந்த நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 35 பேருக்கான நியமனங்கள் கொழும்பில் வைத்து வழங்கப்பட்டிருந்த நிலையில் ஏனைய 77 பெயருக்கான நியமனக் கடிதங்கள் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது

இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு  மாவட்டத்தினுடைய அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக அரசாங்க அதிபர் கோ தனபாலசுந்தரம் மற்றும் பிரதம கணக்காளர் பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த நியமனக்கடிதங்களை பட்டதாரி பயிலுனர்களிடம் வழங்கி வைத்தனர்.

[ நிருபர் சண்முகம் தவசீலன் ]

கருத்து தெரிவிக்க