சினிமா

கோமாளி படத்தின் புதிய பஞ்சாயத்து ஆரம்பம்

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கனாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலரின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘கோமாளி’ படத்தின் கதை சம்பந்தமாக புதிய பஞ்சாயத்து ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இயக்குனர், நடிகர் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ’25+25=25′ என்ற பெயரில் எழுதியுள்ள கதைதான் ‘கோமாளி’ படத்தின் கதையாக இருக்கும் என தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும்

இதையடுத்து சங்கம் சார்பில் ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனிடம் அப்படத்தின் கதைச் சுருக்கத்தைக் கேட்டுள்ளதாகவும் அவரும் அதை சங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு கதைகளும் ஒன்றா என எழுத்தாளர் சங்கம் சார்பில் விசாரித்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க உள்ளார்கள் எனவும் தெரிகிறது.

எது எப்படியாயினும் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்த வெளியாவதும் காணக்கூடியதாக உள்ளது. அதனடிப்படையில் நேற்றையதினம் கோமாளி திரைப்படத்தின் ஹாய் சொன்ன போதும்’ பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் கிர்ஷ் பாடியுள்ளார்.

கருத்து தெரிவிக்க