உள்நாட்டு செய்திகள்புதியவை

பக்தர்கள் சூழ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி சிறீ மாமாங்கேஸ்வர் பேராலய தீர்த்தோற்சவம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களின் பிதிர்க்கடன் தீர்த்தலுடன் நிறைவு பெற்றது.

மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய ஒருங்கே கொண்ட பெருமையினைக்கொண்ட அமிர்தகழி சிறீ மாமாங்கேவரர் ஆலயத்தின் வருடாந்த மாஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயமாகவும் அனுமான் இலங்கையினை எரித்தபோதுஏற்பட்ட தீயினை எரித்த இடமாகவும் கருதப்படும் மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் பத்து தினங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மூலமூர்த்திக்கு விசேட பூஷை வழிபாடுகள் இம்பெற்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது.

நாட்டின் நாலா பாகங்களிலிருந்தும் பல்லாயிuக் கணக்கான பக்தர்கள் தீரத்தோற்சவத்தில் பங்கு கொண்டனர்.விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கருத்து தெரிவிக்க