உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தாய், மகன் சடலமாக கண்டெடுப்பு: சந்தேகிக்கப்படும் தாயின் மூத்தமகன்!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனுடம் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள உயிரிழந்த நபர்கள் வசிக்கும் வீட்டிலிருந்தே இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதான விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர்களின் உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விரிவாக முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

மேலும், உயிரிழந்த தாயின் மூத்த மகனே தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவரென்றும் இதன் காரணமாக அவர் இந்த கொலையை செய்திருக்கலாமென்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க