என்டர் பிரைஸ் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு 429 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட கடன் வழங்கப்பட்டு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் வலிசிங்ஹ ஹரிச்சந்திர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற என்டர் பிரைஸ் சிறிலாங்கா கண்காட்சி நிறைவிற்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த என்டர் பிரைஸ் சிறிலங்கா தேசிய கண்காட்சியை பார்வையிடுவதற்காக 2.5 இலட்சம் மக்கள் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள திறன் ஆற்றலைக்கொண்ட இளைஞர் யுவதிகளின் ஆற்றலை வர்தக ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுப்பதற்காகவே என்டர் பிரைஸ் சிறிலங்கா கண்காட்சியின் நோக்கமாகும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க